யாழ்.நகாில் உள்ள 5 ஹோட்டல்கள் மீது வழக்கு..! சுகாதார சீா்கேடே காரணம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகாில் உள்ள 5 ஹோட்டல்கள் மீது வழக்கு..! சுகாதார சீா்கேடே காரணம்..

யாழ்.நகாில் இயங்கிக் கொண்டிருக்கும் 5 ஹோட்டல்கள் மீது சுகாதார சீா்கேடு குற்றச்சாட்டின் கீழ் யாழ்.மேலதிய நீதிவான் நீதிமன்றில் சுகாதார பாிசோதகா்களினால் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அவற்றில் பிரபல நட்சத்திர விடுதி ஒன்றின் உரிமையாளர் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்த நிலையில் அவரை தலா 50 ஆயிரம் ரூபா ஆள் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், 

வழக்கை வரும் 28ஆம் திகதிவரை ஒத்திவைத்தார். மேலும் நட்சத்திர விடுதிகள் மூன்றின் உரிமையாளர்கள் தம்மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதால் அவர்களில் இருவருக்கு முறையே 21 ஆயிரம் ரூபா 

மற்றும் 15 ஆயிரம் ரூபா தண்டம் விதித்த மேலதிக நீதிவான், அந்த நட்சத்திர விடுதிகள் இரண்டையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவிட்டார். அத்துடன், நட்சத்திர விடுதி ஒன்றின் உரிமையாளர் ஒருவர் குற்றச்சாட்டை 

ஒத்துக்கொண்ட நிலையில் அவருக்கான தண்டனைத் தீர்ப்பை ஒத்திவைத்த மன்று, அவரது நட்சத்திர விடுதி தொடர்பான சுகாதாரச் சீடுகேடு பற்றிய அறிக்கையை மன்றில் சமர்பிக்க அவகாசம் வழங்கி 

வழக்கை வரும் 28ஆம் திகதிவரை ஒத்திவைத்தது.மேலும் இதே குற்றச்சாட்டை முன்வைக்கப்பட்ட நட்சத்திர விடுதி உரிமையாளர் ஒருவர் இன்று மன்றில் முன்னிலையாகத் தவறினார். 

அவருக்கு அழைப்புக் கட்டளை அனுப்ப உத்தரவிட்ட மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், வழக்கை வரும் 28ஆம் திகதிவரை ஒத்திவைத்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு