பிரதமாின் செய்தியுடன் உயா்மட்ட குழு கல்முனையில்..! பாதுகாப்பு உச்சம்..

ஆசிரியர் - Editor I
பிரதமாின் செய்தியுடன் உயா்மட்ட குழு கல்முனையில்..! பாதுகாப்பு உச்சம்..

கல்முனை பிரதேச செயலகம் தரம் உயா்த்தப்படும் என்ற பிரதமாின் செய்தியுடன் அமைச்சா்களான மனோகணேசன், தயாகமகே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் உள்ளடங்கலான குழு போராட்ட களத்திற்குள் சென்றுள்ளனா். 

கல்முனை விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் தமிழர்களின் கோரிக்கைக்கு சாதகமான நிலைப்பாட்டை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது 

குறித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செய்தியோடு எம்.எ.சுமந்திரன், அமைச்சர்களான மனோ கணேசன் மற்றும் தயாகமகே ஆகியோர் தற்போது உலங்குவானூர்தியின் மூலம் அங்கு சென்றடைந்துள்ளனர்.

அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு அந்தப் பகுதி முஸ்லிம் மக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.தமிழர்களின் கோரிக்கைக்கு எதிராக முஸ்லிம் மக்களும் போராட்டத்தில் 

டுபட்டு வருகின்றமையினால் கல்முனை பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு