சுவிஸ் நீர்நிலையில் மிதந்த இலங்கைத் தமிழரின் சடலம்!

ஆசிரியர் - Admin
சுவிஸ் நீர்நிலையில் மிதந்த இலங்கைத் தமிழரின் சடலம்!

சுவிட்சர்லாந்தின் அரோ மாநிலத்தில் நீர்நிலை ஒன்றில் இருந்து, இலங்கைத் தமிழர் ஒருவர் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 50 வயதான தவசீலன் சபாநாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 10ஆம் திகதி இவர் காணாமல் போயிருந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பின்னர் இவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த நபரின் மர்மமான உயிரிழப்பு தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவரது மனைவி தற்போது யாழ்ப்பாணத்தில் வசித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு