மாதா சொரூபத்தை அடித்து உடைத்து வீதியில் வீசிய காட்டுமிராண்டிகள்..! யாழ்.கரையோர பகுதிகளில் பதற்றம்..

ஆசிரியர் - Editor I
மாதா சொரூபத்தை அடித்து உடைத்து வீதியில் வீசிய காட்டுமிராண்டிகள்..! யாழ்.கரையோர பகுதிகளில் பதற்றம்..

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் வேளாங்கண்ணி  மாதா சொரூபம் ஒன்று விசமிகளால் வீதியில் போட்டு உடைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் மணியந்தோட்டம், உதயபுரம் கடற்கரை வீதியில் இன்று (17) திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நள்ளிரவு ஒரு மணிக்கு அந்தப் பகுதியால் கடற்தொழிலுக்குச் சென்றவர்கள் மாதா சொரூபம் இருந்ததைக் கண்டுள்ளனர். 

அதனால் அதன் பின்னரே அது உடைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.

மேலும் மாதா சொரூபம் அமைந்துள்ள இடத்தில் வாகனம் ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்ததை 

கடலில் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் தூரத்திலிருந்து அவதானித்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

இதேவேளை இந்த சம்பவத்தை தொடா்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியபோதும் அசம்பாவிதங்கள் எவையும் இடம்பெறவில்லை. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு