எல்லை கிராமங்களில் உயிா்நீத்தோா் நினைவாக மென்பந்து சுற்றுப்போட்டி..

ஆசிரியர் - Editor I
எல்லை கிராமங்களில் உயிா்நீத்தோா் நினைவாக மென்பந்து சுற்றுப்போட்டி..

வவுனியா வடக்கு பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட தமிழர்கள் வாழும் எல்லைக்கிராமங்களான மருதோடை, ஊஞ்சால்கட்டி, வெடிவைத்தகல்லு, புளியங்குளம், காஞ்சிரமோட்டை போன்ற கிராமங்களில் உயிரிழந்தவர்களின் ஞாபகார்த்தமாக 

ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் நினைவுக்கிண்ணம் இந்த வருடமும் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.மருதோடை சென்சுடர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் குறித்த மென்பந்து சுற்று நினைவுக்கிண்ணமானது 

இந்த மாதம் (ஆனி) 22,23ம் திகதிகளில் மருதோடை சென்சுடர் விளையாட்டுக் கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அணிக்கு 11பேர் கொண்ட 8 அணிகள் பங்குபெறும் லீக் முறையிலான குறித்த 

மென்பந்து சுற்றுப்போட்டியில் வெற்றிபெறும் 1ம்,2ம் அணிகளுக்கு பெறுமதியான வெற்றிக்கிண்ணம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு