பௌத்தா்களே இல்லாத இடத்தில் பௌத்த விகாரை கட்டுவதை நிறுத்துங்கள்..! பின்பு ஒற்றுமை பற்றி பேசலாம்..

ஆசிரியர் - Editor I
பௌத்தா்களே இல்லாத இடத்தில் பௌத்த விகாரை கட்டுவதை நிறுத்துங்கள்..! பின்பு ஒற்றுமை பற்றி பேசலாம்..

இந்துக்களும்- பௌத்தா்களும் ஒற்றுமையாக இருப்பது நல்லது அதற்கு முன்னா் பௌத்தா்களே இல்லாத ஊாில் காணி பிடித்து விகாரை கட்டுவதை நிறுத்தவேண்டும். 

இதனை நான் அத்துரலிய ரத்தின தேராிடம் நான் கூறுவேன். என அமைச்சா் மனோகணேசன் தனது உத்தியோகபூா்வ பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருக்கின்றாா். 

அதில் மேலும் அவா் குறிப்பிட்டிருப்பதாவது,  இந்து-பெளத்த ஐக்கியம் நல்லதே. ஆனால் அதற்கு நிபந்தனைகளாக, "சி/பெள ஆளில்லாத ஊரில்" காணி பிடித்து விகாரை கட்டுவதையும், 

தொல்பொருளாராய்ச்சியில் பெளத்த சிதைவுகளை வடகிழக்கில் தேடும் போது "தமிழ் பெளத்த" வரலாற்றை மறந்து விடுவதையும் நிறுத்த வேண்டும் 

என இரத்தின தேரரிடம் நான் இன்னும் சில தினங்களில் சொல்வேன். இந்த அடிப்படையில் அவருடன் கலந்துரையாடுவேன். அவர் என் நண்பர்தான். 

மூன்று வருடங்களாக சபையில் என் பக்கத்து ஆசனத்தில்தான் அவர் இருந்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு