இலங்கையில் உள்ள சகல மதுபான விற்பனை நிலையங்களுக்கும் 4 நாள் மூடு விழா..! மண்டையை பிய்த்துக் கொள்ளும் மது பிாியா்கள்..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் உள்ள சகல மதுபான விற்பனை நிலையங்களுக்கும் 4 நாள் மூடு விழா..! மண்டையை பிய்த்துக் கொள்ளும் மது பிாியா்கள்..

இலங்கை முழுவதும் மே-17ம் திகதி தொடக்கம் மே-20ம் திகதி வரையான 4 நாட்கள் சகல மதுபான நிலையங்களையும் பூட்டுமாறு மதுவாி திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி நாளை மறுதினம் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை வரை 4 நாள்களுக்கு நாடுமுழுவதுமுள்ள மதுபான சாலைகளை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெசாக் பண்டிகையை முன்னிட்டே இந்த அறிவிப்பை விடுத்துள்ள மதுவரித் திணைக்களம், கட்டளையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு