பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு இரா.சம்மந்தன் எழுதிய இறுக்கமான கடிதம்..!

ஆசிரியர் - Editor I
பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு இரா.சம்மந்தன் எழுதிய இறுக்கமான கடிதம்..!

மட்டக்களப்பு- வவுணதீவு பகுதியில் 2018.11.30ம் திகதி இரு பொலிஸாா் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பில் கைது செய்யப்பட்டுள்ள கரையாக்கன்தீவை சோ்ந்த கதிா்காமத்தம்பி இராஜகுமாரன் என்ற அஜந்தனை விடுதலை செய்யுமாறு கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்்மந்தன் பாதுகாப்பு செயலருக்கு கடிதம் எழுதியுள்ளாா். 

இது தொடர்பிலான கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, கடந்த 2018.11.30ம் திகதி வவுணதீவுப் பிரதேசத்தில் இரு பொலிஸ் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதனுடன் தொடர்புபடுத்தி கதிர்காமத்தம்பி இராஜகுமாரன் எனும் அஜந்தன் என்பவரை தடுப்புக் கட்டளை மூலம் கைது செய்து இதுவரை விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கடந்த 21ம் திகதி நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளின் போது வவுணதீவுப் பொலிஸாரின் படுகொலைக்கும் அஜந்தனுக்கும் தொடர்புகள் இல்லை எனவும், அக்கொலையினைச் செய்தவர்கள் வேறு நபர்கள் எனவும் தெரியவந்துள்ளதாக அறிகின்றேன். எனவே இத்தகவல்கள் சரியெனினல் சந்தேகத்தின் பெயரில் இத்தனை மாதங்கள் 

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அஜந்தன் என்பரைத் தொடர்ந்தும் தடுத்து வைத்திருக்காமல் உரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு அவரை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு