வெடிபொருட்கள், ஆயுதங்களுடன் வடக்கு மாகாணத்திற்குள் நுழைந்த 20 வாகனங்கள்..! சோதனைகள் தீவிரம்.

ஆசிரியர் - Editor I
வெடிபொருட்கள், ஆயுதங்களுடன் வடக்கு மாகாணத்திற்குள் நுழைந்த 20 வாகனங்கள்..! சோதனைகள் தீவிரம்.

வெடிகுண்டுகள் மற்றும் ஆபத்தான ஆயுதங்களுடன் 20 வாகனங்கள் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, மன்னாா், கிளிநொச்சி மாவட்டங்களுக்குள் நுழைந்துள்ளதாக பாதுகாப்பு பிாிவை மேற்கோள்காட்டி இணையள தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. 

இந்த விடயம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, வெடிபொருட்கள், ஆயுதங்களுடன் வாகனங்கள் வடக்கு மாகாணத்திற்குள் நுழைந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம், 

 வவுனியாவில் வீதிகள் மறிக்கப்பட்டு நேற்று விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலை, மாலை என இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், வவுனியாவுக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான 20 வாகனங்களின் 20 இலக்கங்கள் மற்றும் தகவல்கள் பொது மக்களுக்கு காட்சியளிக்கும் வகையில் ஒட்டுவதற்கு பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியாவுக்குள் நுழையும் 4 திசைகளிலும் இந்த பாதுகாப்பு கடவைகள் நிறுத்தப்பட்டு வாகனங்களை சோதனையிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் இராணுவத்தினர் வீடுகளுக்கு சென்று சோதனையிடும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு