இஸ்லாமிய பாடசாலைகள், பள்ளிவாசல்களில் போதனை செய்யும் 600 வெளிநாட்டவா்களை நாடு கடத்த பிரதமா் உத்தரவு..

ஆசிரியர் - Editor I
இஸ்லாமிய பாடசாலைகள், பள்ளிவாசல்களில் போதனை செய்யும் 600 வெளிநாட்டவா்களை நாடு கடத்த பிரதமா் உத்தரவு..

இலங்கையில் உள்ள இஸ்லாமிய பாடசாலைகள் மற்றும் பள்ளிவாசல்களில் போதனையில் ஈடுபட்டிருக்கும் 600 வெளிநாட்டவா்களை உடனடியாக நாடு கடத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதமா் ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்திருக்கின்றாா். 

சுற்றுலா நுழைவிசைவு மூலம், இலங்கை வந்துள்ள இஸ்லாமிய போதகர்கள் பலரும், இஸ்லாமிய பாடசாலைகளிலும், மதரசாக்களிலும், மத போதனை மற்றும் அரபுமொழியை கற்பித்து வருகின்றனர்.

இவற்றின் ஊடாகவே, அடிப்படைவாத கருத்துக்கள் பரப்பப்படுவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதுடன், இவ்வாறான மதப் பாடசாலைகளை தடை செய்யுமாறும், கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்த நிலையில் 600 வெளிநாட்டவர்களை, வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு