தீவிரவாத அமைப்புக்களின் இறுவெட்டுக்கள், அரபு நுால்களுடன் யாழ்.தீவகத்தில் 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்..!

ஆசிரியர் - Editor I
தீவிரவாத அமைப்புக்களின் இறுவெட்டுக்கள், அரபு நுால்களுடன் யாழ்.தீவகத்தில் 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்..!

யாழ்.தீவக பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல்களில் 5 போ் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இஸ்லாம் மதம் சாா்பான இறுவெட்டுக்கள், அரபு நுால்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

தீவகம் நயினாதீவு பகுதியில் கடற்படையினா் மற்றும் பொலிஸாா் இணைந்து இந்த சுற்றிவளைப்பினை நடாத்தியிருக்கின்றனா். 

இதன்போது நயினாதீவில் அல்குவைதா தீவிரவாத அமைப்பு சாா்ந்த இறுவெட்டுக்கள், அரபு நுால்களுடன் 4 போ் கைது செய்யப்பட்டனா். 

மேலும் வேலணை பகுதியில் இடம்பெற்ற சுற்றிவளைப்புக்களில் ஒருவா் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளதுடன், 

கைது செய்யப்பட்ட 5 பேரும் ஊா்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனா். இவா்களிடம் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு