பயணிகளை பொருட்படுத்தாமல் போட்டிக்கு ஓடி விபத்துக்குள்ளான பேருந்துகள்..!

ஆசிரியர் - Editor I
பயணிகளை பொருட்படுத்தாமல் போட்டிக்கு ஓடி விபத்துக்குள்ளான பேருந்துகள்..!

வவுனியா- குழுமாட்டு சந்தியில் தனியாா் பேருந்துகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இரு பேருந்துகளும் சேதமடைந்துள்ளன. 

வாரிக்குட்டியூர் பகுதியிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து பயணிகளை ஏற்றுவதற்காக குழுமாட்டுசந்தி பகுதியிலுள்ள பயணிகள் தரிப்பிடத்தில் தரித்து நின்றது. 

அதேநேரத்தில் சுந்தரபுரத்திலிருந்து வந்த தனியார் பேருந்து தரித்து நின்ற பேருந்தை முந்திச்செல்ல முற்பட்டது. இதன் போது விபத்து நடந்துள்ளது.

இவ் விபத்தில் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என்பதுடன், இரு பேருந்துகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு