தமிழீழ விடுதலை புலிகளைபோல் அல்ல இவா்கள்..! இவா்களை உயிருடன்விடக்கூடாது.

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளைபோல் அல்ல இவா்கள்..! இவா்களை உயிருடன்விடக்கூடாது.

தமிழீழ விடுதலை புலிகள் தனிநாடு கேட்டாா்கள் அதற்காக பயங்கரவாத செயற்பாடுகளை செய்தாா்கள் ஆனால் இஸ்லாமிய தீவிரவாதம் என்பது பயங்கரவாதத்தை மிஞ்சிய மிலேச்சத்தனமாது. என கூறியிருக்கும் எதிா்க்கட்சி தலைவா் மஹிந்த ராஜபக்ஸ,

அவா்களை உயிருடன் விடக்கூடாது முற்றாக அழிக்கவேண்டும் எனவும், கொள்கை அற்ற மக்களை கொலை செய்யும் மிலேச்சத்தனமான பயங்கரவாதிகளை உயிருடன் விடுவது சாியல்ல. அவா்களை அழித்து ஒழிக்கவேண்டும் எனவும் கூறியுள்ளாா். 

சர்வதேச செய்தி சேவையொன்றின் கொழும்பு செய்தியாளருக்கு நேற்றைய தினம் வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

ஐ.எஸ்.ஐ.எஸ். கொள்கை இல்லாமல் படுமோசமான தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களை குறிவைத்து அவர்கள் நடத்திய தாக்குதல்களில் அப்பாவி மக்கள் பலர் பலியாக்கப்பட்டார்கள்.

அதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது பிரதேசத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தமது குடும்பங்களுடன் குண்டுகளை வெடிக்க வைத்து உயிரிழந்துள்ளனர்.

15 பேர் இந்த சம்பவத்தில் பலியாகியுள்ளதுடன், அதில் 6 பச்சிளம் பாலகர்களும் அடங்குகிறார்கள். இப்படி ஈவிரக்கமின்றி ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர்.

இவர்களை உயிருடன் விடக்கூடாது. அவர்களை அரசு முற்றாக அழித்தொழிக்க வேண்டும். அப்போதுதான் மூவின மக்களும் இந்த நாட்டில் நிம்மதிப் பெருமூச்சுடன் வாழ முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு