மாதா சொரூபம் திடீரென சரிந்தது..! மக்கள் கூடியதால் பரபரப்பு. ஆபத்தின் அறிகுறியா?

ஆசிரியர் - Editor I
மாதா சொரூபம் திடீரென சரிந்தது..! மக்கள் கூடியதால் பரபரப்பு. ஆபத்தின் அறிகுறியா?

உடுவில்- அம்பலவாணர் வீதியில் உள்ள செபமாலை தேவாலய முகப்பில் உள்ள மாதா சொரூபம் சரிந்தமையினால் மக்கள் கூடி பெரும் பரபரப்பானது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனினும் சுன்னாகம் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து நிலமையை சுமுகநிலைக்குக் கொண்டு வந்தனர்.

ஆலயத்தின் மேற்கூரையில் கண்ணாடிக் கூட்டுக்குள் மாதா சொரூபம் அமைக்கப்பட்டிருந்த்து. அந்த சொரூபம் இன்று மாலை அவதானிக்கப்பட்ட போது சாய்ந்த நிலையில் காணப்பட்டது.

இந்த விடயம் தேவாலயத்துடன் தொடர்புடையவர்களுக்குத் தெரியப்படுத்த ஊர் முழுவதும் தகவல் பரவியது. அதனால் மக்கள் கூட்டம் கூடினர். அதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பில் அறிந்த பொலிஸார் அங்கு வருகை தந்து மக்கள் கூட்டத்தை கலைத்து சொரூபம் சாய்ந்தமை தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர்.

இதேவேளை மாதா சொரூபம் சரிந்தமை ஆபத்தின் அறிகுறியா? என கூடியிருந்த மக்கள் பேசிக் கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு