சகலரும் அடையாளம் காணப்பட்டனா்..! 5 தற்கொலை அங்கிகள் மீட்பு.

ஆசிரியர் - Editor I
சகலரும் அடையாளம் காணப்பட்டனா்..! 5 தற்கொலை அங்கிகள் மீட்பு.

இலங்கையில் நடைபெற்ற தற்கொலை தாக்குதலுடன் தொடா்புபட்டிருந்த சகலரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தலமையகம் தொிவித்துள்ளது. 

மேலும் தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் இடமொன்றில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐந்து கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சாய்ந்தமருதில் தாக்குதல் மேற்கொண்ட தற்கொலைதாரிகள் அந்தத் தாக்குதலுக்கு முன்னர் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ 

தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட 

குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதியான மொஹம்மட் சஹ்ரான் என்பவரின் சாரதி கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள காவல்துறை தலைமையகம் கபூர் என்றழைக்கப்படும் 

மொஹம்மட் ஷரீவ் காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக  குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளது

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு