சினைப்பா் துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தொலைக்காட்டிகள் மீட்பு..! கிண்ணியா- சமாசந்தீவில் தீவிர சோதனை.

ஆசிரியர் - Editor I
சினைப்பா் துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தொலைக்காட்டிகள் மீட்பு..! கிண்ணியா- சமாசந்தீவில் தீவிர சோதனை.

திருகோணமலை- கிண்ணியா சமாச்சந்தீவு கிராமத்தில் சினைப்பா் துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தெலைக்காட்டிகள் பொலிஸாாினால் மீட்கப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து சமாச்சந்தீவு அஸ்ஸபா பாடசாலையின் பின் பகுதியில் இன்று 11 தொலைக்காட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவ இடத்துக்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர் வீரசிங்க மற்றும் கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கபில காலகே உள்ளிட்ட குழுவினர் வருகை தந்து 

அப்பகுதி மக்களுக்கு இது தொடர்பான கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அப்பகுதி மக்களின் வீடுகளை பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து சோதனையிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு