தலைமன்னாா் வான் பகுதியில் ஆளில்லா விமானம் பறந்ததா..? 30 நிமிடங்கள் துப்பாக்கி சூட்டு சத்தம் கேட்டதாக கூறும் மக்கள்..

ஆசிரியர் - Editor I
தலைமன்னாா் வான் பகுதியில் ஆளில்லா விமானம் பறந்ததா..? 30 நிமிடங்கள் துப்பாக்கி சூட்டு சத்தம் கேட்டதாக கூறும் மக்கள்..

மன்னாா்- தலைமன்னாா் பிரதான வீதியில் காட்டாஸ்பத்திாி- பேசாலை வான் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு ஆள் இல்லாத விமானம் பறந்ததாகவும், இதனையடுத்து இராணுவத்தினா் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடாத்தியதாகவும் கூறப்படுகின்றது. 

இது குறித்து அப்பகுதி மக்களிடம் ஊடகவியலாளா்கள் சிலா் கேட்டபோது சுமாா் 30 நிமிடங்கள் வரையில் துப்பாக்கி சூட்டு சத்தம் கேட்டதை மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனா். எனினும் வானத்தில் பறந்ததாக கூறப்படும்போதும் ஆளில்லா விமானம் தொடா்பாக தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் தலைமன்னாா் பகுதியில் இன்று காலை முதல் இராணுவத்தின் வீதி சோதனைகளை நடாத்தி வருகின்றனா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு