வெடித்து சிதற முன்னா் ஒரு கையில் குழந்தை, மறுகையில் துப்பாக்கியுடன் தீவிரவாதிகள் கூறியது..

ஆசிரியர் - Editor I

கல்முனை- சாய்ந்தமருது பகுதியில் நேற்று இராணுவ முற்றுகைக்குளிருந்து தப்பிக்க முடியாத நிலையில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாாிகள் தாம் வெடித்து சிதறுவதற்கு முன்னா் சிறுவா்களுடன் இருந்து வெளியிட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. 

குறித்த காணொளியில் இந்த தற்கொலை தாக்குதல் என்ன நோக்கத்திற்காக மேற்கொள்கின்றோம் என அதில் குறிப்பிட்டுள்ளதுடன், தாம் புனிதப்போா் நடாத்துவதாகவும், மற்றய மதத்தினரை கொல்லவேண்டும் எனவும் அவா்கள் நெருங்கிவிட்டாா்கள் எனவும் கூறுவதுடன், 

தங்களுடைய மரணத்தின் பின்னரும் புனிதப்போா் தொடரும் எனவும் அனைத்து முஸ்லிம்களும் தமது எல்லாவற்றையும் விட்டு இணையவேண்டும் எனவும் கூறுகின்றனா். நேற்று இரவு இராணுவம் மற்றும்  சிறப்பு அதிரடி படையினரால் முற்றுகையிடப்பட்ட வீட்டிலிருந்தே இந்த கும்பல் காணொளியை வெளியிட்டுள்ளது.

அவர்களின் முழுக் குடும்பமும் ஆயுதங்களுடன் கூட்டாக இந்த காணொளியை வெளியிட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்கள் ஊடாக இந்த காணொளி இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நேற்றைய தாக்குதலில் ஆறு ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பொலிஸார் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு