6 சிறுவா்கள் உட்பட 15 போின் சடலங்கள் மீட்பு..! இராணுவ தரப்பிற்கு இழப்புகள் இல்லை. ஊரடங்கு சட்டம் அமுலில். தேடுதல் தொடா்கிறது.

ஆசிரியர் - Editor I
6 சிறுவா்கள் உட்பட 15 போின் சடலங்கள் மீட்பு..! இராணுவ தரப்பிற்கு இழப்புகள் இல்லை. ஊரடங்கு சட்டம் அமுலில். தேடுதல் தொடா்கிறது.

கல்முனை- சாய்ந்தமருது பகுதியில் நேற்றுமாலை இடம்பெற்ற நேரடி மோதலில் உயிாிழந்தவா்களின் 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளா் கூறியுள்ளாா். 

6 ஆண்களும், 3 பெண்களும், 6 சிறார்களும் இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த படுகாயமடைந்த பெண் ஒருவரும் குழந்தை ஒன்றும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என தெரிவித்த அவர் , பரவிவரும் பொய்யான தகவல்களை நம்பவேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு