5 சடலங்கள் மீட்பு, இராணுவ தரப்பிலும் இழப்பு, கிழக்கில் தொடர்கிறது பதற்றம்..

ஆசிரியர் - Editor I
5 சடலங்கள் மீட்பு, இராணுவ தரப்பிலும் இழப்பு, கிழக்கில் தொடர்கிறது பதற்றம்..

கல்முனை- சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற தீவிரவாதிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் இரு பெண்கள் உட்பட 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை அஷ்ரப் வைத்திசாலைக்கு 5 சடலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. இவர்களில் இரு பெண்களும் மூன்று ஆண்களும் அடங்குகின்றனர்.

இரு பெண்களில் ஒருவர் மோதல் பகுதக்குள் தவறுதலாக நுழைந்தபோது உயிரிழந்துள்ளார் மற்றய பெண் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

இதேநேரம் பாதுகாப்பு தரப்பிலும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை ஊர்ஜிதம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு