இராணுவ முற்றுகைக்குள்ளிருந்து தப்பி ஓடிய ஆயுத குழுவுடன் துப்பாக்கி சண்டை தொடா்கிறது, பலா் காயம்..

ஆசிரியர் - Editor I
இராணுவ முற்றுகைக்குள்ளிருந்து தப்பி ஓடிய ஆயுத குழுவுடன் துப்பாக்கி சண்டை தொடா்கிறது, பலா் காயம்..

கல்முனை- சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சண்டையில் ஆயுத குழு ஒன்று தப்பி ஓடியுள்ள நிலையில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டு தொடா் தேடுதல் வேட்டை நடாத்தப்படுகின்றது. 

இந்த சம்பவத்தில் பலா் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவா்கள் கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவதுடன், 

சாய்ந்தமருது, சவளக்கடை, மற்றும் சம்மாந்துறை பகுதியில் தப்பி ஓடியுள்ள தீவிரவாதிகளை தேடி சல்லடைபோட்டு இராணுவம் தேடிவருகின்றது. 

அதேசமயம் அங்கு இடம்பெற்ற 3 குண்டு வெடிப்புக்களில் 2 தற்கொலை தாக்குதல்கள் என தொியவந்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு