மே மாதம் 6ம் திகதிவரை பாடசாலைகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை..! தீவிரவாத தாக்குதல்களின் எதிரொலி.

ஆசிரியர் - Editor I
மே மாதம் 6ம் திகதிவரை பாடசாலைகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை..! தீவிரவாத தாக்குதல்களின் எதிரொலி.

தொடா்ச்சியான தீவிரவாத தாக்குதல்களை தொடா்ந்து இலங்கையில் உள்ள சகல பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகள் மே மாதம் 6ம் திகதியே ஆரம்பமாகும். என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 

முன்னதாக நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் தேடுதல் நடத்தியதன் பின்னர் பாடசாலைகள் 29ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.

எனினும் நாட்டின் நிலைமை இன்னமும் சீராகாத நிலையில் மே மாதம் 6ஆம் திகதி மீள கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு