தந்தை செல்வா நினைவு நாளில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் அஞ்சலி..

ஆசிரியர் - Editor I
தந்தை செல்வா நினைவு நாளில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் அஞ்சலி..

தந்தை செல்வாவின் நினைவு தினத்தில் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கும் நினைவு அஞ்சலி இன்று தந்தை செல்வா சதுக்கத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றன உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, 

தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈஸ்வரபாதம் சரவணபவன், யாழ்.மாநக முதல்வர் இமானுவேல் ஆனால்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தந்தை செல்வாவின் சதுக்கத்தில் உள்ள சமாதிக்கு மேல் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர். 

பின்னர் தீவிரவாத தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்காக தீபங்களை ஏற்றியும், அமைதியாக நின்றும் பிராத்தனையில் ஈடுபட்டனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு