தீவிரவாதிகளுடன் அமைச்சா் றிஷாட்டுக்கு நெருங்கிய தொடா்புள்ளது..! நாடாளுமன்ற உறுப்பினாின் கருத்தால் தென்னிலங்கையில் பரபரப்பு.

ஆசிரியர் - Editor I
தீவிரவாதிகளுடன் அமைச்சா் றிஷாட்டுக்கு நெருங்கிய தொடா்புள்ளது..! நாடாளுமன்ற உறுப்பினாின் கருத்தால் தென்னிலங்கையில் பரபரப்பு.

உயிா்த்த ஞாயிறு தினத்திற்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட தொடா் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கும் அமைச்சா் றிஷாட் பதியூதினுக்கும் நெருங்கிய தொடா்பு உள்ளது. என நாடாளுமன்ற உறுப்பினா் எஸ்.பி.திஸாநாயக்க கூறியுள்ளாா். 

நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் இல்லத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

குண்டு தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேக நபராகக் கருதப்படும் மொஹமட் இப்ராஹிம் பாரிய வணிகர் ஆவார். அவருடன் ரிஷாட் பதியூதினின் தம்பி இணைந்து வணிக நடவடிக்கைககள் பலவற்றை முன்னெடுத்துள்ளார்.

முன்னான் ஜனாதிபதி சந்திரிகா மீதான குண்டு தாக்குதல் முயற்சியில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரொருவர் இவரது உறவினராவார்.

அத்தோடு மன்னார் பிரதேசத்தில் சுமார் 3000 ஏக்கர் காணி ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரது உறவினர்கள் பலரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, 

பள்ளிவாசல்களை புனரமைப்பதற்கு வழங்கப்பட்ட வெளிநாட்டு நிதி கொல்லையிப்பட்டுள்ளமை தொடர்பிலும் அவர் மீது முறைப்பாடுகள் காணப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு