நிட்டம்புவ பஸ்யால காட்டுக்குள் பாாிய சுற்றிவளைப்பு..! தீவிரவாதிகளின் முகாம் கண்டுபிடிப்பு.

ஆசிரியர் - Editor I
நிட்டம்புவ பஸ்யால காட்டுக்குள் பாாிய சுற்றிவளைப்பு..! தீவிரவாதிகளின் முகாம் கண்டுபிடிப்பு.

கொழும்பு- கண்டி வீதியில் அமைந்துள்ள காட்டு பகுதியில் தீவிரவாதிகளின் பயிற்சிமுகாம் உள்ளதாகவும், தீவிரவாதிகள் தங்கியுள்ளதாகவும் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று இரவு பாாிய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. 

நிட்டம்புவ, பஸ்யால காட்டுக்குள் தீவிரவாதிகளின் முகாம் ஒன்று உள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அதற்கமைய நேற்று இரவு விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் காட்டுக்குள் நுழைந்து விசேட சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொண்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பிற்கு முன்னர் அந்த பகுதி மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காட்டுக்குள் 4 பேர் மறைந்திருப்பதாகவும், அவர்கள் தப்பிக்க முடியாதளவு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது அந்தப் பகுதியில் முகாம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. எனினும் இது குறித்து பொலிஸார் உத்தியோகபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை. இந்த முகாம் குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு