தவுஹீத் ஜமாத் அமைப்பின் முக்கிய தீவிரவாதி இந்தியாவின் பிடியில்..! அதிா்ச்சி தகவலை வெளியிட்டது CNN.

ஆசிரியர் - Editor I
தவுஹீத் ஜமாத் அமைப்பின் முக்கிய தீவிரவாதி இந்தியாவின் பிடியில்..! அதிா்ச்சி தகவலை வெளியிட்டது CNN.

இலங்கையில் பாாிய தாக்குதல்களை நடாத்த திட்டம் தீட்டிய இஸ்லாமிய தீவிரவாதிகளில் ஒருவா் இந்திய புலனாய்வு பிாிவிடம் சிக்கியுள்ளதாகவும், அவா் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இலங்கையின் புலனாய்வு பிாிவுகளுக்கு இந்தியா எச்சாிக்கை செய்ததாகவும் சீ.என்.என் செய்தி சேயை கூறியுள்ளது. 

இந்திய புலனாய்வு அமைப்புக்கள் தமக்கு முன்னதாகவே எச்சாிக்கை வழங்கியதை இலங்கை அதிகாாிகள் ஒப்புக் கொண்டுள்ளனா். இதேவேளை இந்திய அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்ட ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையிலேயே 

இலங்கையை எச்சரித்ததாக இந்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட சந்தேகநபரை விசாரணை செய்தவேளை கிடைத்த தகவல்களையே தாம் வழங்கியதாகவும், சந்தேகநபர், தான் இலங்கையில் பயிற்சியளித்த நபரின் பெயர் விபரங்களை வெளியிட்டார் எனவும் இந்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

தாம் ஐஎஸ் அமைப்பை சேர்ந்த ஒருவரை விசாரணை செய்துகொண்டிருந்த வேளை அந்த சந்தேகநபர் ஜஹ்ரான் ஹாசிம் என்ற நபரின் பெயரை வெளியிட்டார் என குறிப்பிட்டுள்ள இந்திய அதிகாரி இவர் தவுஹீத் ஜமாத் அமைப்பை தற்கொலை தாரி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபர் ஜஹரான் ஹாசிமை தீவிரவாதமயப்படுத்துவதற்கு தான் உதவினார் என தங்கள் பிடியிலிருந்த சந்தேகநபர் தெரிவித்தார் எனவும் இந்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.எனினும் ஐஎஸ் சந்தேகநபர் எப்போது கைதுசெய்யப்பட்டார் என்பது குறித்து இந்திய அதிகாரி எதனையும் தெரிவிக்கவில்லை. 

ன சிஎன்என் குறிப்பிட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு