அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்த நாடாளுமன்றில அமோக ஆதரவு..!

ஆசிரியர் - Editor I
அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்த நாடாளுமன்றில அமோக ஆதரவு..!

இலங்கை நாடாளுமன்றில் இன்று விவாதிக்கப்பட்ட அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட விடயம் சபையில் வாக்கெடுப்பு இல்லாமல் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமையை அடிப்படையாக வைத்து ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தின் சரத்துக்கள் தொடர்பான விடயம் இன்று (24) நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த விவாதம் இன்று மு.ப. 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை இடம்பெற்றது. அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினர்.

இறுதியில் ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டத்துக்கு வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றால் ஏகமனதாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு