பருத்துறை சிங்கர் காட்சியறையால் உள்ள தொலைக்காட்சி பெட்டிக்கு தீ வைப்பு..

ஆசிரியர் - Editor I
பருத்துறை சிங்கர் காட்சியறையால் உள்ள தொலைக்காட்சி பெட்டிக்கு தீ வைப்பு..

பருத்தித்துறை நகரப் பகுதிபகுதியில் அமைந்துள்ள சிங்கர் காட்சி அறையின் முன்பாக வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு தீவைத்துக் கொழுத்திய மர்ம நபரால் பருத்தித்துறையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

குறித்த சிங்கர் காட்சி அறையின் முன்பாக வைக்கப்பட்டிருந்த பழைய தொலைக்காட்சி பெட்டிகளே இன்று புதன் கிழமை அதிகாலை 5.39 மணியளவில் வந்த மர்ம நபரால் தீவைத்து கொழுத்தப்பட்டுள்ளது.

நீளக்காட்சட்டை மற்றும் முழுக்கை சட்டையுடன் கையில் தீப்பெட்டியுடன் வந்த மர்ம நபர் சில வினாடிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இரு தொலைக்காட்சி பெட்டிகளை தீ வைத்து கொழுத்தியுள்ளார். 

இக்காட்சிகள் சிங்கர் காட்சி அறையின் கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.

இதனை பார்வையிட்டுள்ள புலனாய்வுப் பிரிவினர் அந்த மர்ம நபர் குறித்த விசாரணையை தொடங்கியுள்ளார்கள். 

ஈஸ்டர் பெருநாளில் நாட்டை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தினையடுத்து நாடு முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள இவ்வேளையில் மர்ம நபரது இச்செயற்பாடு பருத்தித்துறையில் பெரும் பதற்றத்தை எற்படுத்தியுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு