பதவியை இழக்கும் பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்..

ஆசிரியர் - Editor I
பதவியை இழக்கும் பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்..

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பெர்ணான்டோ ஆகியோர் தாம் பதவி விலகுவதற்கான அறிவிப்பை ஐனாதிபதிக்கு வழங்கவுள்ளனர்.

உதிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 359 பேர்வரை உயிரிழந்தனர். தாக்குதல்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலரும் பொலிஸ் மா அதிபரும் பொறுப்புக் கூறவேண்டும் என்று ஆளும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், பாதுகாப்பு அமைச்சின் செயலர் மற்றும் பொலிஸ் மா அதிபர் இருவரும் பதவி விலகல் கடிதத்தை வழங்கவேண்டும் என்று ஜனாதிபதியால் கோரப்பட்டதாகச் செய்திகள் தெரிவித்தன.

இந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சின் செயலர் ஏற்கனவே தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு