8வது தீவிரவாதி எங்கே..? தாக்குதல் தொடரும் என்கிறது இந்தியா.!

ஆசிரியர் - Editor I
8வது தீவிரவாதி எங்கே..? தாக்குதல் தொடரும் என்கிறது இந்தியா.!

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களுக்கு ISIS என்ற சர்வதேச பயங்கரவாத அமைப்பு உரிமைகோரியிரிக்கும் நிலையில் தாக்குதல்கள் தொடரலாம் என இந்தியா இலங்கையை எச்சரித்துள்ளது.

இதன்படி குறித்த தற்கொலை தாக்குதல்களை நடாத்திய NTJ, ISIS ஆகிய இரு  அமைப்புக்களும் தொடர்ந்து தாக்குதல்களை நடாத்தலாம் என இந்திய புலனாய்வு அமைப்பிக்கள் கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன.

மேலும் அந்த தகவலின் படி இந்த தீவிரவாத குழுக்களின் 2 வது அணி இந்த தாக்குதலை நடாத்தும் என கூறப்பட்டுள்ளது. அதேவேளை அமெரிக்க புலனாய்வு அமைப்பான SITE வெளியிட்டள்ளதகவலில்,

ISIS அமைப்பு 8 பேருடைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. ஆனால் 7 தாக்குதல்களுக்கு அந்த அமைப்பு உரமைகோரியுள்ளதாக கூறப்பட்டுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு