யாழ்.மாவட்டத்தில் இதுவரை 9 போ் கைது..! சுற்றிவளைப்புக்கள், சோதனைகள் தொடரும் என்கிறது பொலிஸ்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் இதுவரை 9 போ் கைது..! சுற்றிவளைப்புக்கள், சோதனைகள் தொடரும் என்கிறது பொலிஸ்..

தொடா் தற்கொலை குண்டு தாக்குதல்களை தொடா்ந்து யாழ்.மாவட்டத்தில் இன்று செவ்வாய் கிழமை வரையில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கைகள், சுற்றிவளைப்புக்களில் 9 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாா் கூறியுள்ளனா். 

சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடித்திருந்தவர்கள் மற்றும் பொதிகளை தம்வசம் வைத்திருந்தவர்களே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தகவல் வெளியிட்டுள்ளனர். 

இக் கொடூர தாக்குதல்களை அடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டு வருகின்றது. இதன்படி யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் இதுவரையில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்பபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு