வவுனியா மாவட்ட வைத்தியசாலை திடீரென முற்றுகையிடப்பட்டு சோதனை..! மக்கள் வெளியேற்றப்படுவதால் பதற்றம்.

ஆசிரியர் - Editor I
வவுனியா மாவட்ட வைத்தியசாலை திடீரென முற்றுகையிடப்பட்டு சோதனை..! மக்கள் வெளியேற்றப்படுவதால் பதற்றம்.

வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்குள் விசேட அதிரடிப்படையினா் மற்றும் பொலிஸாா் திடீரென இறக்கப்பட்டு கடுமையான சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தொிவிக்கின்றன. 

பாதுகாப்பு அமைச்சிடமிருந்து வந்த அவசர உத்தரவின் பிரகாரம் இந்த திடீர் சோதனைகள் அங்கு இடம்பெற்றுவருவதாக எமது வவுனியா செய்தியாளர் கூறுகின்றார்.

இதனால் வைத்தியசாலைக்குள்ளிருந்த மக்கள் வெளியேற்றபட்டு அங்கு தீவிர சோதனைகளை பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் மேற்கொண்டுவருகின்றனர்.

வைத்தியசாலையில் தற்பொழுது பதற்றநிலை தணிந்துள்ளபோதும் வெளியிலிருந்து வைத்தியசாலைக்குள் செல்லும் மக்கள் பொலிஸாரின் சோதனைக்குட்படுத்தப்பட்டே அனுமதிக்கப்படுவதாக எமது செய்தியாளர் கூறுகின்றார்.

கொழும்பிலிருந்து கிடைத்த அவசர பணிப்பின் காரணமாகவே இந்த பதற்ற நிலை நிலவியதென்று பொலிஸார் தெரிவித்ததாக அவர் மேலும் கூறுகின்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு