நீதிபதியின் வீட்டுக்குள் புகுந்த வாகனம்..! பெருமளவு பொலிஸாா் குவிக்கப்பட்டு பரபரப்பு..

ஆசிரியர் - Editor I
நீதிபதியின் வீட்டுக்குள் புகுந்த வாகனம்..! பெருமளவு பொலிஸாா் குவிக்கப்பட்டு பரபரப்பு..

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் வீட்டு வாயிலில் விபத்துக்குள்ளான வாகனம் வாயில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே பாய்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது, 

இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றது. எனினும் நடந்தது சாதாரண விபத்து என்பதையறித்து பதற்ற நிலை தணிந்துள்ளது. 

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் கடமைக்கு செல்லும் நேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம், கச்சேரி – நல்லூா் வீதியில் அமைந்துள்ள மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக இன்று காலை 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.

வேகமாக வந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மேல் நீதிமன்ற நீதிபதியின் இல்ல வாயில் கதவுடன் மோதியது. நீதிபதி இல்ல வாயில், அருகிலுள்ள வீட்டு சுவா் ஆகியவை இதனால் உடைந்து சேதமாயின.

அப்பகுதியில் உள்ள மின்கம்பம் ஒன்றும் முறிந்தது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு