கொழும்பில் மீண்டும் பாாிய குண்டு வெடிப்பு.. கொச்சிக்கடையில் பதற்றம்.

ஆசிரியர் - Editor I

கொழும்பு- கொச்சிக்கடை சென் அன்டனிஸ் தேவாலயத்தின் அருகில் வாகனம் ஒன்றை சோதனையிட முயற்சித்த நிலையில் குண்டு வெடித்து சிதறியுள்ளது. 

விமானப்படையினரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நடத்திய சோதனையின்போது வாகனம் ஒன்றை வழிமறித்து சோதனையிட முயற்சித்துள்ளனா். 

இதன்போது வாகனம் திடீரென வெடித்து சிதறியுள்ளது.

2ம் இணைப்பு..

கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் உள்ள தேவாலயத்திற்கு அருகில் சற்று முன்பு வான் ஒன்றை சோதனை இட்டபோது குண்டு வெடித்த சம்பவத்தில் எந்த சேதமும் ஏற்படவில்லை.

என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு வான் இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் 

குண்டு செயலிழக்கும் பிரிவினர் சென்று செயலிழக்க செய்ய முற்பட்ட போது வெடித்துள்ளது. இதன்போது அப்பகுதி மக்களை அப்புறப்படுத்தியே இதனை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு