ஷங்காிலா ஹோட்டலுக்குள் புகுந்து தாக்குதல் நடாத்தியவா் அடையாளம் காணப்பட்டாா்..

ஆசிரியர் - Editor I
ஷங்காிலா ஹோட்டலுக்குள் புகுந்து தாக்குதல் நடாத்தியவா் அடையாளம் காணப்பட்டாா்..

கொழும்பு ஷங்காிலா ஹோட்டலுக்குள் புகுந்து தற்கொலை தாக்குதல் நடாத்தியவா் இன்சான் சீலவன் என்னும் பெயாில் தொழிற்சாலை ஒன்றை நடாத்துபவா் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அந்த தொழிற்சாலையில் பணியாற்றும் 9 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாா் கூறியுள்ளனா். 

கொழும்பு, நீர்கொழும் மற்றும் மட்டக்களப்பு தேவாலயங்கள் மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் நேற்று பயங்கரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதல் ஷங்கரி ல நட்சத்திர ஹோட்டலிலும் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலை நடத்தியவரது உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு பொலிஸார் அறிவித்தனர்.

தொழிற்சாலை உரிமையாளரான இன்சான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது தொழிற்சாலையில் பணியாற்றும் 9 தொழிலாளிகள் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு