இன்று நள்ளிரவு தொடக்கம் அவசரகால நிலை நடைமுறைக்கு வருகிறது..

ஆசிரியர் - Editor I
இன்று நள்ளிரவு தொடக்கம் அவசரகால நிலை நடைமுறைக்கு வருகிறது..

இலங்கையில் நேற்று நடாத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களை தொடா்ந்து இன்று நள்ளிரவு தொடக்கம் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்த தேசிய பாதுகாப்பு சபை தீா்மானித்துள்ளது. 

இதுதொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் சிங்கப்பூருக்கு விடுமுறை கால தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை நாடு திரும்பினார்.

இந்த நிலையில் தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டம் அவர் தலைமையில் இன்று நண்பகல் இடம்பெற்றது. அதிலேயே அவசர காலச் சட்டத்தை ஜனாதிபதியின் அதிகாரத்தின்படி வரும் 30 நாள்களுக்கு நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு