கிழக்கு மாகாணத்திலிருந்து இயங்கும் முஸ்லிம் தீவிரவாத அமைப்பே தாக்குதல்களுக்கு காரணம்..! பொலிஸ்மா அதிபரை பதவி நீக்குங்கள்..

ஆசிரியர் - Editor I
கிழக்கு மாகாணத்திலிருந்து இயங்கும் முஸ்லிம் தீவிரவாத அமைப்பே தாக்குதல்களுக்கு காரணம்..! பொலிஸ்மா அதிபரை பதவி நீக்குங்கள்..

இலங்கையில் இயங்கிக் கொண்டிருக்கும் தௌஹீத் ஜமாத் அமைப்பே மிலேச்சத்தனமான தற்கொலை குண்டு தாக்குதல்கள் மற்றும் குண்டு வெடிப்புக்களை நடாத்தியது. 

மேற்கண்டவாறு மத்திய சுகாதார அமைச்சா் ராஜித சேனாரத்ன கூறியுள்ளாா்.  அலரிமாளிகையில் இன்று நண்பகல் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தாக்குதல்கள் தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்கள் கடந்த 4ஆம் திகதியே முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தன. 

எனினும் தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உடனடியாகப் பதவி விலகவேண்டும். அல்லது அவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதியிடம் கோருவோம்.

பிரதமர் தலைமையில் நேற்று நடந்த பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்கு முப்படைத் தளபதிகள் சமுகமளிக்க மறுத்தனர். பாதுகாப்புச் சபை கடந்த டிசெம்பர் மாதத்துக்கு பின்னர் கூடவில்லை  என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு