நடந்தது தற்கொலை தாக்குதல், இதுவரை 207 பேர் உயிரிழப்பு..! பெண் உட்பட 7 பேர் கைது.

ஆசிரியர் - Editor I
நடந்தது தற்கொலை தாக்குதல், இதுவரை 207 பேர் உயிரிழப்பு..! பெண் உட்பட 7 பேர் கைது.

கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் பல தற்கொலை குண்டு தாக்குதல்கள் என கூறியிருக்கும் பாதுகாப்பு அமைச்சு,

இதுவரையில் 8 வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் 207 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

இன்று மாலை ஊடக பிரதானிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பாதுகாப்பு அமைச்சர் றுவான் மேலும் கூறுகையில், 8 வெடிப்பு சம்பவங்கள் இதுவரை இடம்பெற்றுள்ளது.

ஒரு பெண் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. தெமட்டகொட பகுதியில் வெடிபொருட்கள் உள்ளதாக கூறப்பட்ட நிலையில்,

அங்கு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் குண்டு வெடித்ததில் 3 பொலிஸார் உயிரிழந்துள்ளனர் என கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு