தெமட்டகொட பகுதியில் 3 குண்டு வெடிப்புகள், வீடொன்றிலிருந்து குண்டுகள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
தெமட்டகொட பகுதியில் 3 குண்டு வெடிப்புகள், வீடொன்றிலிருந்து குண்டுகள் மீட்பு..

கொழும்பு - தெம்ட்கொட பகுதியில் 3 குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளதுடன் வீடொன்றிலிருந்து வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை தொடக்கம் கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்ற நிலையில் இன்று பிற்பகலில் மேலும் இரு இடங்களில் குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளது.

தெமட்டகொட பகுதியில் மூன்று வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.  அங்குள்ள மகாவில பூங்காவுக்கு அண்மையில் உள்ள வீடு ஒன்றில் வெபொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்துக்கு பொலிஸார் வெடிகுண்டு மீட்கும் குழுவினர் செல்கின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு