கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரம்..! குண்டு வெடிப்பு இடம்பெற்றதான செய்தி தவறு.

ஆசிரியர் - Editor I
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரம்..! குண்டு வெடிப்பு இடம்பெற்றதான செய்தி தவறு.

கொழும்பு கட்டுநாயக்க சா்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், கடுமையான சோதனை நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. 

இன்று கொழும்பில் இடம்பெற்ற தொடா் குண்டு வெடிப்புக்களை தொடா்ந்து கட்டுநாயக்க சா்வதேச விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு இடம்பெற்றதாக வதந்திகள் பரவின, 

ஆயினும் அதனை மறுத்துள்ள பொலிஸாா், கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. 

இதன்படி பாா்வையாளா் பகுதி மூடப்பட்டுள்ளது. பயணிகளை தவிர வேறு எவரும் விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு