யாழ்.உரும்பிராய் பகுதியில் விபத்து..! இரு இளைஞர்கள் கவலைக்கிடம்.

ஆசிரியர் - Editor I
யாழ்.உரும்பிராய் பகுதியில் விபத்து..! இரு இளைஞர்கள் கவலைக்கிடம்.

யாழ்.பலாலி வீதி உரும்பிராயில் சற்று முன்னர் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் இன்று மாலை 4.15 மணியளவில் உரும்பிராய் இலங்கை வங்கிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;

நேருக்கு நேர் வந்த உந்துருளியும், முச்சக்கர வண்டியொன்றும் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஒன்றுடன் ஒன்று, மோதியே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 சம்பவத்தில் படுகாயங்களுக்கு உள்ளான இருவர் வீதியில் சென்றவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு