தமிழ் மக்களின் அழிவுகளுக்கு பிரபாகரன் காரணமல்ல..! அரசியல்வாதிகளே காரணம் என்கிறாா் சங்காி..

ஆசிரியர் - Editor I
தமிழ் மக்களின் அழிவுகளுக்கு பிரபாகரன் காரணமல்ல..! அரசியல்வாதிகளே காரணம் என்கிறாா் சங்காி..

தமிழ் மக்களின் அழிவுக்கு தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரன் காரணம் அல்ல. என கூறியிருக்கும் தமிழா் விடுதலை கூட்டணியின் தலைவா் வி.ஆனந்தசங்காி, தமிழ் அரசியல் தலைவா்களே காரணம் எனவும் கூறியிருக்கின்றாா். 

கிளிநொச்சி தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தான் கண்ட தலைமைத்துவ பண்பு கொண்டவர்களில், 

பிரபாகரன் நல்லதொரு தலைமைத்துவ பண்பு கொண்டவர் என தெரிவித்துள்ளார். அவரின் கீழ் உள்ளவர்கள் செய்த அத்தனை தவறுகளையும் தானே ஏற்றுக்கொண்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.சிறந்த தலைமைத்துவ பண்புகளைக்கொண்ட பிரபாகரன், தமிழ் மக்களின் அழிவுக்கு காரணமானவர் அல்ல. 

என்றும் அன்றிருந்த அரசியல் தலைவர்களே காரணமானவர்கள் என்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி மேலும் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு