கிளிநொச்சியில் தியாகதீபம் அன்னை பூபதியின் 31 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு!

ஆசிரியர் - Admin
கிளிநொச்சியில் தியாகதீபம் அன்னை பூபதியின் 31 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு!

தியாகதீபம் அன்னை பூபதியின் 31 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் இன்று நடைபெற்றன.

தமிழர் தாயகப்பகுதியை ஆக்கிரமித்திருந்த இந்திய படையினரை வெளியேறக் கோரி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் குருந்த மர நிழலில் ஒருமாத காலமாக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 31வது ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை பகல் 9-30மணிக்கு கிளிநொச்சில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வட மாகாணசபை முன்னள் உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, தவிசாளர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என பெருமளவானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு