தமிழீழ விடுதலை புலிகளின் புகைப்படத்திற்கு லைக் போட்டதற்காக 4ம் மாடி விசாரணை..!

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளின் புகைப்படத்திற்கு லைக் போட்டதற்காக 4ம் மாடி விசாரணை..!

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் படம் ஒன்றுக்கு லைக் போட்டாா் என்ற குற்றச்சாட்டில் தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் போராளி ஒருவா் 4ம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாாிக்கப்பட்டதன் பின்னா் விடுவிக்கப்பட்டுள்ளாா். 

தெல்லிப்பளையைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவரே நேற்று (18) வியாழக்கிழமை விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

முகநூல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றை லைக் செய்தமை தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தலைமையகமான நான்காம் மாடியில் முன்னிலையாகுமாறு முன்னாள் போராளிக்கு தெல்லிப்பளைப் பொலிஸாரால் அழைப்புக் கடிதம் வழங்கப்பட்டிருந்தது.

அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டவாறு அவர் நேற்று வியாழக்கிழமை நான்காம் மாடிக்குச் சென்றிருந்தார். அவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்குட்படுத்தினர்.

தங்களுடன் நெருக்கமானவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே விசாரணைக்கு அழைக்கப்பட்டீர்கள் என பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தெரிவித்ததாக முன்னாள் போராளி கூறியுள்ளார். விசாரணைகளின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு