இந்திரலோக கோலம் பூணுகிறது வல்வெட்டித்துறை..

ஆசிரியர் - Editor I
இந்திரலோக கோலம் பூணுகிறது வல்வெட்டித்துறை..

யாழ்.குடாநாட்டில் சிறப்புமிக்க வல்வெட்டித்துறை இந்திர விழா நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்திர விழாவுக்கான ஒழுங்கமைப்புக்கள் முனடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

இந்­திர விழாவை முன்­னிட்டு, வல்­வெட்­டித்­துறை ஊழிக்­காடு தொடக்­கம் வல்­வெட்­டித்­துறை பொலி­கண்டி வரைக்­கு­மான சுமார் நான்கு கிலோ­மீற்­றர் தூத­ரத்­துக்கு 15 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட மின்­கு­மில் அலங்காரங்கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

சுமார் 300க்கும் மேற்­பட்ட வாழை­கள் இந்த விழா­வுக்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இந்­துக் கட­வு­ளர்­க­ளின் திரு­வு­ரு­வங்­கள் பொருத்­தப்­பட்ட 10 கட்­அ­வுட்­கள் பெரி­ய­ள­வில் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளன. சுமார் 100 புகைக்கூண்டு­கள் விடப்­ப­ட­வுள்­ளன.

அவற்­றில் ஐந்து கூடு­கள் அறு­பது அடி­கள் உய­ர­மு­டிவை. வாண­வே­டிக்­கை­க­ளுக்­கும் ஏற்­பா­டு­கள் செய்யப்பட்டுள்­ளன. ஏழு இசைக்­கு­ழுக்­கள் இசை வழங்­கத் தயா­ரா­கி­யுள்­ளன.

வில்;லுப்­பாட்டு, நாட­கம், நட­னம், பாரம்­ப­ரிய நிகழ்­வு­கள் என்­ப­வற்­று­டன் கட­லில் மேடை அமைத்­தும் ஓர் இசை நிகழ்வு நடத்­தப்­ப­ட­வுள்­ளது. 50 வரு­டங்­க­ளுக்­கும் மேலாக இந்த விழா கொண்­டா­டப்­பட்டு வரு­கின்­றது.

இந்த விழாவை யாழ்ப்­பா­ணத்­தி­லும் ஏனைய பகு­தி­க­ளி­லும் இருந்­தும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­கள் நேரில் சென்று பார்­வை­யிட்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு