7.1 மில்லி மீற்றா் மழைவீழ்ச்சி பதிவு, மாலைவேளைகளில் மழை பெய்யும்..

ஆசிரியர் - Editor I
7.1 மில்லி மீற்றா் மழைவீழ்ச்சி பதிவு, மாலைவேளைகளில் மழை பெய்யும்..

யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று மட்டும் 7.1 மில்லி மீற்றா் மழைவீழ்ச்சி பெய்துள்ளதாக வானிலை அவதான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. 

வானிலை அவதான நிலையத்தின் யாழ்.பிராந்திய காரியாலயம் மேலும் தெரிவித்துள்ளதாவது, வடக்கில் இடை நிலை பருவ பெயர்ச்சி ஆரம்பித்துள்ளதாகவும் , 

அதனால் மாலை வேளைகளில் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் உண்டு. குறிப்பாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அதிகளவான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மாலை வேளைகளில் மழை பெய்யும் போது இடி மின்னல் தாக்கம் அதிகமாக காணப்படும். அது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என யாழ்.பிராந்திய காரியாலய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

யாழில்.நேற்றைய தினம் பெய்த மழையின் போது மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு