1271 சாரதி அனுமதி பத்திரங்கள் இரத்து. சாராய கெடு பிடித்தவா்களுக்கு நடந்த கதி..

ஆசிரியர் - Editor I
1271 சாரதி அனுமதி பத்திரங்கள் இரத்து. சாராய கெடு பிடித்தவா்களுக்கு நடந்த கதி..

சித்திரை புத்தாண்டு காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 1271 சாரதிகளின் அனுமதி பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாா் கூறியுள்ளனா். 

இது தொடர்பில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட கருத்து தெரிவிக்கையில்,

கடந்த 11 ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின்போது இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தக் காலப்பகுதியில் வீதி ஒழுங்குகளை மீறிய சாரதிகள் தொடர்பிலும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு