தனியாா்துறை ஊழியா்களுக்கு இது இன்ப அதிா்ச்சி..!

ஆசிரியர் - Editor I
தனியாா்துறை ஊழியா்களுக்கு இது இன்ப அதிா்ச்சி..!

இலங்கையில் தனியாா்துறை ஊழியா்களின் அடிப்படை சம்பளத்தை அதிகாிக்கவுள்ளதாக அரச தகவல்கள் தொிவிக்கின்றன. 

தனியார் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மே மாதம் முதலாம் திகதியில் இருந்து அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.

ஊழியர்களின் அடிப்படை சம்பளம் தற்போது பத்தாயிரம் ரூபாவாக காணப்படுகிறது. அதனை 12500 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பள அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி விரைவில் வெளியிடப்படவுள்ளது. அதன் பின்னர் உத்தியோகபூர்வமாக தனியார் துறையினரின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கும் 

என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு