காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பாரிய போராட்டத்துக்கு ஆயத்தம்!

ஆசிரியர் - Admin
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பாரிய போராட்டத்துக்கு ஆயத்தம்!

திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். திருகோணமலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த போராட்டம், மட்டக்களப்பு காந்தி சிலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு அங்கிருந்து மனித உரிமை ஆணைக்குழுவை நோக்கி ஊர்வலமாக செல்லவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அரசியல் பிரமுகர்கள், நிறுவனங்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மதத் தலைவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் எந்தவிதமான பதிலையும் வழங்காத நிலையில், சர்வதேசமே தமக்கான தீர்வை வழங்கும் என நம்பிருந்ததாகவும் எனினும் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கி சர்வதேசமும் தம்மை ஏமாற்றிவிட்டதாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு