திருகோணமலை கடற்படைமுகாம் அருகில் சடலம் மீட்பு, காதல் விவகாரத்தால் வெட்டி கொலை என்கிறது பொலிஸ்..

ஆசிரியர் - Editor I
திருகோணமலை கடற்படைமுகாம் அருகில் சடலம் மீட்பு, காதல் விவகாரத்தால் வெட்டி கொலை என்கிறது பொலிஸ்..

திருகோணமலை கடற்படைமுகாமிற்கு அருகில் இன்று காலை இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு காதல் விவகாரமே காரணம் என பொலிஸாா் சுட்டிக்காட்டியுள்ளனா். 

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை-நீதிமன்ற வீதி,வில்லூன்றி பகுதியைச் சேர்ந்த தங்கத்துரை தனுஸ்டன் எனவும் பொலிஸாா் தெரிவித்தனர்.

யுவதி ஒருவரை இருவரும் காதலித்து வந்த நிலையில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட வாக்குவாதமே இதற்கு காரணம் எனவும் தெரியவந்துள்ளது. 

டற்படை முகாமை அண்மித்த பகுதியில் வாளால் வெட்டியதாக கூறப்படும் சந்தேக நபர் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ள நிலையில், 

காவற்துறை கைது செய்துள்ளதாகவும் படுகாயங்களுக்கு உள்ளான சந்தேகநபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாகவும் 

ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்போது திருகோணமலை பொது மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

வாளால் வெட்டிய சந்தேகநபர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் துறைமுக காவற்துறை தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு